பிரித்தானியா உட்பட 9 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்! சிங்கப்பூர் முக்கிய அறிவிப்பு
பிரித்தானியா உட்பட 9 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்! சிங்கப்பூர் முக்கிய அறிவிப்பு பிரித்தானியா உட்பட 9 நாடுகளுக்கு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள சிங்கப்பூர் வெளிநாட்டு பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியது.
இந்நிலையில், தற்போது நாட்டில் புதிதாக பதிவாககும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால் எதிர்வரும் அக்டோபர் 13ம் திகதி முதல் கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகளை அனுமதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
அதேசமயம், நவம்பர் மாதத்திலிருந்து தென் கொரியாவிலிருந்து வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
இந்த 9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை.
அதேசமயம், நாட்டில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் குழுவாக அனுமதிக்கப்படுவார்கள் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.