பிரித்தானியாவில் இங்கு இதையெல்லாம் தடை செய்யப்போகிறோம்! அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரித்தானியாவின் இங்கிலாந்தில் தடை செய்யப்படக்கூடிய பல பொருட்களில் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் தட்டுகள், உணவை உண்ண பயன்படுத்தப்படும் கத்திகள், முட்கரண்டி, கரண்டிகள் மற்றும் கப்கள் ஆகியவை அடங்கும் என அரசாங்கம் கூறியுள்ளது.
இலையுதிர்காலத்தில் தொடங்கப்பட்ட புதிய பொது ஆலோசனையின் ஒரு பகுதியாக இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு டன்னுக்கு 200 பவுண்டுகள் என ஏப்ரல் 2022 முதல் ஒரு உலகளாவிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் வரியையும் அறிமுகப்படுத்துவோம்.
குறைந்தபட்சம் 30% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும் என்ற வரம்பை பூர்த்தி செய்யாது பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கு இந்த வரி விதிக்கப்படும் என சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பிரித்தானியாவில் ஒவ்வொரு நபரும் 18 ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் 37 கட்லரிகள் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் straws, stirrers மற்றும் cotton buds விநியோகத்திற்கு தடை செய்வதின் மூலம் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
முக்கிய பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பை விற்பனை 95% குறைத்துள்ளது என சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice கூறினார்.
தடை செய்ய பரிசீலனையில் உள்ள ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் முழு பட்டியல் மற்றும் பிற ஆலோசனை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.