விமான விபத்தில் உயிரிழந்த தம்பியின் உயிரிழப்பை தாங்க முடியாமல் அக்கா மரணம்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த தம்பியின் உயிரிழப்பை தாங்க முடியாமல் அவரது அக்கா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கா மரணம்
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.
இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விமான விபத்தில் 57 வயதான போகிலால் மற்றும் அவரது மனைவி 55 வயதான ஹன்சா ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த போகிலாலின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அவரது அக்கா கோமதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனிடையே, உயிரிழந்த போகிலாலின் உடலை இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோமதிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |