சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
சிவசங்கர் பாபா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டதால், சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.