நிற பாகுபாட்டால் நான் ஒதுக்கப்படுகிறேன்! தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வேதனை
கிரிக்கெட்டில் தான் அனுபவித்த நிற பாகுபாடுகள் குறித்து வேதனையுடன் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.
இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் வீரராக இருந்தவர் லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன். சுழற்பந்து ஜாம்பவானாக இவர் திகழ்ந்தார்.
தற்போது இவர் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
அவரின் சமூகவலைதள பதிவில், இதுநாள் வரை என்னுடைய வாழ்கையில் தொடர்ந்து நிற பாகுபாட்டால் விமர்சிக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வருகிறேன்.
இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் எனது சொந்தநாட்டு மக்களே என்னை நிறத்தை வைத்து விமர்சித்தனர்.
எனவே இவற்றையெல்லாம் விட, நீங்கள் எனது கமெண்ட்டேட்டரியை கிண்டல் செய்வது பாதிப்பை ஏற்படுத்தாது என மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.