அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு மாணவி செய்த பகீர் செயல்! பள்ளிக்கு கொண்டு வந்த அந்த பொருளால் நேர்ந்த விபரீதம்
வடமேற்கு அமெரிக்க மாநிலமான இடாஹோவில் உள்ள ஒரு பள்ளியில், மாணவி ஒருவர் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடாஹோ நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ரிக்பி நடுநிலைப் பள்ளியில், பெயர் குறிப்பிடப்படாத மாணவி ஆறாம் வகுப்பு படிக்கிறார். அதாவது அவருக்கு 11 அல்லது 12 வயது இருக்கும்.
அவர் வியாழக்கிழமையன்று தனது பையிலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் பல முறை சுட்டதாக கூறப்படுகிறது.
அதில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்ததுள்ளனர், ஆனால் அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல என கூறப்பட்டுள்ளது.
மாணவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நேரத்தில், ஆசிரியர் ஒருவர் அவரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியை கைப்பற்றினார். பின்னர் மாணவியை பொலிஸில் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் குறித்து எப்.பி.ஐ மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கத் துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
சமீபத்திய வாரங்களில், இண்டியானாபோலிஸில் உள்ள ஒரு ஃபெடெக்ஸ் அலுவலகம், கலிபோர்னியாவில் ஒரு அலுவலக கட்டிடம், கொலராடோவில் ஒரு மளிகைக் கடை மற்றும் அட்லாண்டாவில் பல ஸ்பாக்கள் உள்ளிட்ட பல வெகுஜன துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அமெரிக்கா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் தற்கொலைகள் உட்பட சுமார் 43,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.