முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் குங்குமாதி க்ரீம்... எப்படி செய்வது?
பொதுவாகவே பெண்கள் தங்களது சருமத்தை அழகாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் பெரியளவில் தெரிவதில்லை.
ஆகவே சருமத்திற்கு முழு ஊட்டசத்தும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குங்குமப்பூ க்ரீமை பயன்படுத்தலாம்.
இதை பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு சருமத்துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றும்.
இதை பயன்படுத்துவதன் மூலம் முகத்தை பொலிவுள்ளதாக முற்றிலும் மாற்றலாம். ஆகவே இதை எப்படி இலகுவான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
கற்றாலை ஜெல்
- குங்குமப்பூ
-
ஆலிவ் ஆயில்
-
பாதாம் ஆயில்
-
ரோஸ் வாட்டர்
- வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
செய்முறை
-
முதலில் ஒரு சிறிய டப்பாவில் குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் கற்றாலை ஜெல், பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
-
இந்த கலவையில் குங்குமப்பூ கலவை மற்றும் வைட்டமின் ஈ எண்ணை, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு கலக்க வேண்டும்.
- இதை ஒரு டப்பாவி சேர்த்து வைத்து சுமார் 6 மாதத்திற்கு பயன்படுத்த முடியும்.
- இதனை முகம், கை, கழுத்து என அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |