இந்தியாவின் முதல் கடல் விமானம் - வெற்றிகரமாக சோதனை
இந்தியாவில் நீர்நிலைகள் அதிகம் உள்ள, விமான நிலையம் அமைக்க முடியாத இடங்களில் கடல் விமான போக்குவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
சமீபத்திய திருத்தப்பட்ட உடான் திட்டத்திலும் கடல் விமான போக்குவரத்துக்கு அரசு முக்கியத்துவம் அளித்தது.
இந்தியாவின் முதல் கடல் விமானம்
தற்போது இந்தியாவின் முதல் கடல் விமான சேவை நிறுவனமாக SkyHope Aviation நிறுவனம் உருவெடுத்துள்ளது.
Spicejet நிறுவனர் அஜய் சிங்கின் மகள் அவனி சிங், இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம், தனது முதல் கடல் விமான தரையிறக்கம் மற்றும் புறப்படுதல் ஆகியவற்றை ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்பணையில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
Skyhop, set to become India’s first commercial seaplane operator, successfully completed a test flight with a landing and take-off from the Ganga Barrage in Rishikesh on April 6.
— SkyHop Aviation Private Limited (@FlySkyHop) April 7, 2026
This unique project is inspired by the vision of our Hon’ble Prime Minster, Shri Narendra Modi ji.… pic.twitter.com/pftpxVuGfq
பறப்பில் ஈடுபட்டிருந்த விமானம் கங்கை தடுப்பணையில் தரையிறங்கி வெற்றிகரமாக மேலெழும்பியது.
விமானப் போக்குவரத்தை நிறுத்தியிருந்த, முந்தைய 'ஃப்ளை பிக்' விமான நிறுவனத்திற்குச் சொந்தமான டர்போப்ராப் விமானத்தில் மிதவைகளை பொருத்தி கடல் விமானமாக மாற்றியுள்ளனர்.
DGCA யிடம் இருந்து உரிமம் பெற்றவுடன், 19 இருக்கைகள் கொண்ட விமானத்துடன் முதற்கட்டமாக லட்சதீவுகளில் உள்ள 5 தீவுகளில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள SkyHope Aviation நிறுவனர் அவனி சிங்,"வழக்கமான விமான நிலையங்கள் சாத்தியமில்லாத அல்லது மேம்படுத்துவதற்கு கடினமாக உள்ள இடங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கடல் விமானங்கள் புதிய வழித்தடங்களைத் திறக்க முடியும், பயண நேரத்தைக் குறைக்க முடியும், மேலும் பல தொலைதூரப் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் நெருக்கமாக இணைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சுற்றுலாவை வலுப்படுத்துவதிலும், பிராந்திய அணுகலை அதிகரிப்பதிலும், தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும் எங்களது பங்களிப்பை ஆற்ற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்." என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |