நட்சத்திர வீரருக்கு கொரோனா.. இன்று நடைபெறவிருந்த இலங்கை-இந்தியா இடையேயான டி-20 போட்டி ஒத்திவைப்பு!
கொழும்பில் இன்று இலங்கை-இந்தியா இடையே நடைபெறவிருந்த இரண்டாவது டி-20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொரை 2-1 என கைப்பற்றியது.
இதனையடுத்து, கொழும்பில் நடந்த முதல் ஒரு டி-20 போட்டியிலும் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
மீதமுள்ள இரண்டு டி-20 போட்டிகளையும் கைப்பற்றி இந்தியாவுக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்குமா என இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலைியல், இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை-இந்தியா இடையேயான 2வது ஒரு நாள் போட்டி, தவிர்க்கமுடியாத காரணத்தினால் நாளை (ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால், நாளை இலங்கை-இந்தியா மோதும் 2வது டி-20 போட்டி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.