2 பேர் சதம்..3 பேர் அரைசதம்! முதல் இன்னிங்ஸில் ஓட்டங்களை குவித்து டிக்ளர் செய்தது வங்க தேசம்! மிஞ்சுமா இலங்கை?
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலில் இன்னிங்ஸில் வங்க தேச அணி 541 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 21ம் திகதி Pallekele மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற முதலில் துடுப்பெடுத்தாடி வங்க தேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் எடுத்தந்தது.
2வது நாளும் தொடர்ந்து விளையாடிய வங்க தேச ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 474 ஓட்டங்கள் குவித்தது.
இன்று 3வது நாள் துடுப்பாட்டதை தொடர்ந்த வங்க தேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 541 ஓட்டங்கள் எடுத்திருந்த போது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.
தமீம் (90), சைப் ஹாசன் (0), சாந்தோ (162), மோமினுல் (127), லிட்டன் தாஸ் (50), மெஹிடி ஹசன் (3), தைஜுல் இஸ்லாம் (2) ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகினர்.
டிக்ளர் செய்யும் போது ரஹீம் (68), டாஸ்கின் அகமது (6) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இலங்கை தரப்பில் பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லக்மால், லஹிரு குமார, தனஞ்சய டி சில்வா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
தற்போது 3வது நாள் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் வங்க தேசத்தை மிஞ்சுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.