நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை: ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி
இந்தியர்களை வரவேற்பதில் ஜேர்மனி பெருமளவில் ஆர்வம் காட்டிவருகிறது. அதுவும், ஜேர்மன் சேன்ஸலர் இந்தியா சென்ற நிலையில், இந்திய ஜேர்மனி உறவு குறித்த செய்திகள் கவனம் ஈர்த்துவருகின்றன.
ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், Spice Village என்னும் பெயரில் இந்திய பல்பொருள் அங்காடி ஒன்று இயங்கிவருகிறது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்துவரும் இந்தியர்கள், தங்கள் சொந்த நாட்டின் உணவுக்காக ஏங்கும் நிலையில், இந்திய நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை ஒரு இடத்தில் கிடைக்குமானால், அது அவர்களுக்கு மகிழ்ச்சிதானே.
அவ்வகையில், பெர்லினில் இயங்கிவரும் Spice Village என்னும் பல்பொருள் அங்காடி இந்தியர்களின் விருப்ப நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை ஒரே இடத்தில் வழங்கிவருகிறது.
இந்த பல்பொருள் அங்காடியை ஷிவம் பாரிக் (Shivam Parikh) என்பவர் தன் மனைவியான அஞ்சனியுடன் இணைந்து நடத்திவருகிறார்.
தான் ஜேர்மனிக்கு வந்தபோது, தாங்கள் இந்தியாவில் சாப்பிட்ட பல உணவுப்பொருட்கள் ஜேர்மனியில் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.
ஆகவே, இந்திய உணவுக்கான மசாலா பொருட்கள், தேநீர், காய்கறிகள், ஏன் பார்லே ஜி பிஸ்கட் வரைஒரே இடத்தில் கிடைப்பதுடன், மக்கள் அமர்ந்து தேநீர் அருந்தும் வசதியும் செய்துகொடுத்துள்ளார் ஷிவம், Spice Village பல்பொருள் அங்காடியில்.
அத்துடன், சில நிலங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றில் காய்கறிகளையும் விளையச் செய்கிறார்கள் ஷிவமும், அஞ்சனியும்.
டிஜிட்டல் உலகிலேயே நாள் முழுவதும் கடந்து செல்லும் நிலையில், இயற்கையுடன் செலவிடும் நேரம் மனதுக்கு புத்துணர்வைக் கொடுப்பதாகத் தெரிவிக்கிறார்கள் தம்பதியர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |