குப்பை தொட்டியில் கைவிட்ட பெண்ணை கடித்த விஷப்பாம்பு! அதை லாவகமாக பிடித்த மகன் செய்த செயல்... வாயடைக்க வைத்த சம்பவம்
இந்தியாவில் தாயாரை 4 அடி நீளமுள்ள பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை எடுத்து கொண்டு மகன் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்காளத்தின் பண்டுவா நகரை சேர்ந்தவர் ரேணு ராய் (60). இவர் நேற்று முன் தினம் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள பகுதிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது குப்பை தொட்டியில் கை வைத்த போது திடீரென அதன் உள்ளிருந்து வெளியே வந்து சீறிய 4 அடி நீளமுள்ள பாம்பு ரேணுவின் கைகளில் கடித்தது. இதனால் வலியில் துடித்தபடி கீழே சரிந்தார், அவர் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மகன் பிரூ பாம்பை பிடித்தார், பின்னர் ரேணுவோடு சேர்ந்து பாம்பையும் எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு பிரூவிடம் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள் வாயடைத்து நின்றனர், பிறகு எதற்காக பாம்பை கொண்டு வந்தீர்கள் என கேட்டனர். அதற்கு, எந்த பாம்பு என் தாயாரை கடித்தது என நீங்கள் பார்த்தால் அதற்கு ஏற்றார் போல சிகிச்சையளிக்கலாம் அல்லவா என கூறி பிரூ அதிரவைத்தார்.
பின்னர் ரேணுவுக்கு உடனடியாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது. அந்த பாம்பை பிரூ எங்கே கொண்டு விட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை.