சாலையில் சுருண்டு கிடந்த பாம்பை கவனிக்காமல் நடந்து சென்ற 20 வயது இளம்பெணுக்கு நேர்ந்த கதி!
தமிழகத்தில் இரவு நேரத்தில் தனியாக இருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார்.
வேதாரண்யம் தாலுக்கா, ஆயக்காரன்புலம் ஒன்றாம்சேத்தி முதலியார் குத்தகை பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் பிரதீபா (20).
நர்சிங் படித்துவிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கடையில் வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் கிடந்த பாம்பை பிரதீபா கவனிக்காமல் இருந்தார், இந்த நிலையில் பாம்பு அவரை வேகமாக கடித்தது.
இதில் வலியால் துடித்த பிரதீபா மயங்கி விழுந்தார், அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீபா இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.