என் உயிர் உள்ள வரை! ராஜநாகம் தீண்டிய வாவா சுரேஷின் உருக்கமான பேட்டி
என் உயிர் உள்ள வரை பாம்புகளை மீட்பேன் என பாம்பு மீட்பரான வா வா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த பிரபல பாம்பு மீட்பரான வா வா சுரேஷை சில நாட்களுக்கு முன்னர் ராஜநாகம் தீண்டியது.
கோட்டயம் குறிச்சி பகுதியில் குடியிருப்பில் புகுந்த ராஜநாகத்தைப் பிடிக்கும்போது வலது தொடையில் தீண்டியது.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வா வா சுரேஷ்க்கு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
தொடர் சிகிச்சைக்கு பின்னர், வா வா சுரேஷ் குணமானார், இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வா வா சுரேஷ் பேசுகையில், எனக்கு எதிராக பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறது, வனத்துறையை சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரி தான் இதை செய்கிறார்.
பாம்புகளை பிடிக்க என்னை அழைக்கக்கூடாது என மக்களை எச்சரிக்கை செய்கிறார், என் உயிர் உள்ள வரை பாம்புகளை பிடிப்பேன், இனிமேல் அதிக கவனத்துடன் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.