வீட்டு சமையலறையில் ஏதோ ஒன்று சுருண்டு கிடப்பதை கண்ட நபர்! அருகில் சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் வீட்டு சமையலறையில் பெரிய சாரைப்பாம்பு இருப்பதை கண்ட நபர் அதிர்ச்சியடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்த்து வருபவர் குலாப்ஜான்.
இவர் தனது வீட்டின் சமையலறைக்கு சென்ற போது ஏதோ ஒன்று சுருண்டு கிடப்பதை பார்த்தார். அருகே சென்ற போது பாம்பு தான் சுருண்டு படுத்திருந்து என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் குப்புராஜ் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர்.
பின்னர் கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள காப்புக் காட்டில் விட்டனர்.
இது தொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ளது.