கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பனிச்சிறுத்தை!
அமெரிக்காவில் உள்ள மில்லர் பார்க் உயிரியல் பூங்காவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட பனிச்சிறுத்தை இறந்தது.
அமெரிக்காவில் இல்லினாய்ஸின் புளூமிங்டனில் உள்ள மில்லர் பார்க் உயிரியல் பூங்காவில் ஒரு பனிச்சிறுத்தை கொரோனா வைரஸ் (COVID-19) நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது என அந்த மிருகக்காட்சிசாலை வியாழக்கிழமை (ஜனவரி 6) இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், ரிலு (Rilu) என்ற 11 வயது பனிச்சிறுத்தை உயிரியல் பூங்காவில் கோவிட் தூண்டப்பட்ட நிமோனியாவுடன் போராடி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலு 2011-ல் ஓக்லஹோமா நகர மிருகக்காட்சிசாலையில் இருந்து அங்கு வந்ததாகவும், அது இங்கு வாழ்ந்த காலத்தில், தற்போது Species Survival திட்டத்தின் (SSP) ஒரு பகுதியாக இருக்கும் ஏழு சந்ததிகளை உருவாக்கியுள்ளதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.
பனிச்சிறுத்தை குட்டிகளை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ரிலு மில்லர் பார்க் மிருகக்காட்சிசாலையை உருவாக்கியதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலுவின் ஆளுமையும் அழகும் இனி இங்கு இருக்காது ஆனால் அதனை மறக்க முடியாது என மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.
ரிலுவின் படங்கள் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உட்பட உலகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. ஜோயல் சார்டோரின் The Photo Ark திட்டத்தில் ரிலு படம் பிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் (COVID-19) மனிதர்களிடமிருந்து காட்டு வெள்ளை வால் மான்களுக்கு (wild white-tailed deer) பரவியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்காவைத் தொடர்ந்து, வனவிலங்குகளில், மூன்று வெள்ளை வால் மான்களில், கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை கனடாவும் கண்டறிந்துள்ளது.
மான்களில் COVID-19 வைரஸ் பரவுவது தனித்துவமானது அல்ல, ஏனெனில் இந்த வைரஸ் உலகளவில் வளர்க்கப்படும் மிங்க், பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற துணை விலங்குகள் மற்றும் சில மிருகக்காட்சிசாலை விலங்குகள் உட்பட பல வகையான விலங்குகளை பாதித்துள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.