பழைய சாதம் நல்லது தான்! ஆனால் அதை உண்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்டாகும் தான். அது மிகவும் ஆரோக்கியமான உணவு என்று நிரூபிக்கப்பட்டது தான்.
அதை காலை வேளையில் குடிப்பது மிகவும் நல்லது. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
பழைய சோறு எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
ஆனால் அதேசமயம் அளவுக்கு அதிகமாக பழைய சாதம் சாப்பிடுகிற பொழுது அது ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆம்! அதிலுள்ள பாக்டீரியாக்களால் உங்களுக்கு வயிற்றுப் பொருமல் ஏற்பட்டு கை, கால் வலி ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.