பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றியவர் ஜாமீனில் வெளியில் வரமுடியாத வகையில் கைது! மோசமான செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை
அமெரிக்காவில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் வீராங்கனை மீது பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
செண்ட் ஆல்பன்ஸை சேர்ந்தவர் பவுல் லாட் (32). இவர் எனோஸ்பெர்க் உயர்நிலை பள்ளியில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றினார்.
அப்போது வீராங்கனை ஒருவர் மீது பவுல் பாலியல் தாக்குதல் நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பவுலை பொலிசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவராத முடியாத பிரிவில் அவர் கைதாகியுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.