அடுத்த மாதம் முதல்... பிரித்தானியாவில் கடைசி கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்துதல் குறித்து சில தகவல்கள்
பிரித்தானியாவின் கடைசி கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் 21ஆம் திகதி முதல் நெகிழ்த்தப்பட உள்ளன. அதன்படி, சமூக இடைவெளி விதி முற்றிலும் விலக்கப்பட உள்ளது.
அதாவது மக்கள் இனி ஒரு மீற்றருக்கும் அதிகமான இடவெளி விட்டு அமரத்தேவையில்லை. இது குறித்து பேசிய வெளியுறவுச் செயலர் Dominic Raab, ஜூன் 21 வாக்கில் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படும் என்றார்.
மதுபான விடுதிகளும், உணவகங்களும் மேஜைகளுக்கு நடுவே திரைகள் போடவும், அங்குமிங்கும் நடக்கும்போது மக்கள் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டாலும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள Dominic Raab, கட்டுப்பாடாக இருந்து என்னென்ன லாபங்களை அடைந்தோமோ, அவற்றை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.
ஆகவே, சமூக இடைவெளி முதலான விதிகள் அகற்றப்பட்டாலும், மாஸ்க் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் கோடை வரையிலாவது அமுலில் இருக்கும் என்கிறார் அவர்.