சமூக ஊடகங்களால் பறி போகும் சிறுவர்களின் உயிர் - வெளியான அதிர்ச்சி தகவல்!
சமூக ஊடகங்களின் பயன்பாடு குழந்தைகள் தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ள பங்களித்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது.
அதன் தலைவரும், ஆலோசகருமான சமூக மருத்துவர் டாக்டர் கபில ஜெயரத்ன, 2024 ஆம் ஆண்டில் 200 இற்கும் மேற்பட்ட குழந்தை தவறான முடிவு எடுக்கும் வழக்குகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
“குழந்தை உயிர் பறித்தல்... 2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 குழந்தைகள் தவறான முடிவை எடுத்துள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, கடந்த ஆண்டு 270 பேர் தவறான முடிவை செய்து கொண்டனர். இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு எடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கை, சமூக ஊடகங்களை ஏதோ ஒரு வகையில் தடை செய்வதாகும். ஒரு நாடாக என்ன செய்ய முடியும் என்பது குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம், மேலும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் கூடுதல் விவரங்களை வெளியிடுவோம் என்று நம்புகிறோம்.”
சமூக ஊடகங்கள் குழந்தைகள் மீது நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தினாலும், அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகளில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |