நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் இறந்ததாக பரபரப்பு புகார்! மனித உரிமை ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது.
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் தனது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி பேசி கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு எக்மோ கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளித்தும் அடுத்தநாள் காலையில் உயிரிழந்தார். 59 வயதான விவேக்கின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனிடையில் விவேக் இறப்பதற்கு முந்தைய நாள் தான் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். இதையடுத்து அவர் மரணத்துக்கும், தடுபூசிக்கும் சம்மந்தம் இருக்குமா என பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர்.
பின்னர் விவேக், அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பதற்கும், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்டர்களை முன்னிலையில் பேட்டியளித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், விவேக் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தான் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.