சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனம்... சக வீரர்கள் கண்ட திடுக்கிடவைத்த காட்சி
சுவிஸ் கணவாய்ப்பகுதி ஒன்றில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றை கவனித்த சக இராணுவ வீரர்கள், அருகில் சென்று பார்த்தபோது, அதற்குள் நான்கு இராணுவ வீரர்கள் மயங்கிய நிலையில் இருப்பதை கவனித்துள்ளனர்.
நேற்று காலை Simplon கணவாய்ப் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், உடனடியாக அந்த வீரர்களை மீட்ட சக வீரர்கள் அவர்களை மீட்டு, ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குளிர் அதிகமாக இருந்ததால், இரவு முழுவதும் கார் எஞ்சினை இயங்கும் நிலையிலேயே வைத்துவிட்டு தூங்கியிருக்கிறார்கள் அந்த இராணுவ அதிகாரிகள்.
ஆகவே, கார்பன் மோனாக்சைடு காருக்குள் பரவி, அதனால் இந்த இராணுவ வீரர்கள்
மயக்கமடைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.