லண்டனில் குறிப்பிட்ட பகுதிகளில் தனியாக சிக்காதீர்கள்... பாதிக்கப்பட்ட பெண்ணின் பகீர் வாக்குமூலம்
ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்பதும் எவரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்
ஆட்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அந்த நபர் தம்மை பின் தொடரவில்லை
லண்டனில் ஸ்ட்ராட்ஃபோர்ட் பகுதியில் தமக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ள பெண் ஒருவர், குறிப்பிட்ட பகுதிகளில் தனியாக சிக்காதீர்கள் என பெண்களை எச்சரித்துள்ளார்.
கிழக்கு லண்டன் வாசியான எல்லா என்பவரே ஸ்ட்ராட்ஃபோர்ட் பகுதியில் தமக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர். சம்பவத்தன்று கடை ஒன்றில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் வழியில் ஆண் ஒருவர் தம்மை நெருங்கி, கையை பற்றிக்கொள்ள முயன்றதாக எல்லா தெரிவித்துள்ளார்.
Image: Facundo Arrizabalaga
தொடர்ந்து தமது உடைகளை அவர் பறிக்க முயற்சிக்க, எல்லா உதவி கேட்டு சுற்றும்முற்றும் பார்த்துள்ளார். மாலை மங்கும் நேரம் என்றாலும், மக்கள் கூட்டம் காணப்பட்டது எனக் கூறும் எல்லா, ஆனால் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை என்பதுடன் எவரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்.
தம்மை நிர்வாணப்படுத்த அந்த நபர் முயற்சிக்கும் நிலையில், அந்த போராட்டங்களுக்கு நடுவே அவரது பணப்பை தவற, அந்த நபரின் கவனம் சிதறிய சில நொடிகளில் எல்லா அங்கிருந்து தப்பியதாக கூறியுள்ளார்.
மேரிலாந்து நிலையத்தில் ஆட்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அந்த நபர் தம்மை பின் தொடரவில்லை எனவும் எல்லா தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவம் தமக்கு புதிதல்ல எனவும், ஸ்ட்ராட்ஃபோர்ட் பகுதியில் சில இடங்களில் இதுபோன்ற வன்முறைகளை தாம் எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image: Facundo Arrizabalaga
இதனாலையே, ஸ்ட்ராட்ஃபோர்ட் பகுதியில் குறுப்பிட்ட தெருக்களை தாம் தவிர்ப்பதாகவும் எல்லா குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, தனது பெரும்பாலான நேரத்தை ஒலிம்பிக் பூங்கா பகுதியில் எல்லா செலவிடுகிறார், அங்கு பொலிசார் கண்காணிப்பு இருப்பதால் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக எல்லா தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் நியூ டவுன் பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபரில் மட்டும் 23 பலாத்கார சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 71 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.