80 வயது தந்தையின் தலையை துண்டாக வெட்டி எடுத்த மகன்! கதிகலங்க வைத்த சம்பவத்தின் முழு பின்னணி
இந்தியாவில் தந்தை இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதால், மகன் அவரின் தலையை துண்டாக வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கேட் ராஜ்குரு நகரைச் சேர்ந்தவர் சங்கர் போர்டே. 80 வயதாகும் இவர் மனைவி இறந்த நிலையில், தன்னுடைய மகனான சேகர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஆனால் மகனோ தந்தையை சரியாக கவணிக்காமல் இருந்துவந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் சங்கர் போர்டே இரண்டாவது திருமணம் செய்வது என முடிவெடுத்து, திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளார்.
இதற்காக அவர் ஆன்லைனிலும் தேடி வந்துள்ளார். இதுகுறித்து மகன் சேகருக்கு தெரியவந்ததும், இரண்டாவது திருமணம் செய்தால், தனக்கு வரவேண்டிய சொத்து முழுவதும் வராமல் போய்விடும் என்பதால் தந்தையைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் ஒருகட்டத்தில் எல்லை மீறியதால், வீட்டில் இருந்த அரிவாளால் தனது சொந்த தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த முதியவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
ஆனால் ஆத்திரம் தனியாத நிலையில் இருந்த சேகர் கையில் இருந்த அரிவாளால் தந்தையின் தலையை துண்டாக வெட்டி எடுத்துள்ளார். அதன் பின் காவல்நிலையத்திற்கு சென்று தந்தையை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து சேகர் வீட்டிற்குச் சென்ற, பொலிசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.