மேகாலயா தேனிலவுக் கொலை: அவரா இவர்?
மேகாலயாவுக்கு தேனிலவுக்காக ஒரு தம்பதி சென்றிருந்த நிலையில், மனைவியே ஆள் வைத்து தன் கணவனைக் கொலை செய்த வழக்கில் தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.
மேகாலயா தேனிலவுக் கொலை
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) என்பவருக்கும், சோனம் (25) என்னும் பெண்ணுக்கும் கடந்த மாதம், அதாவது, மே மாதம் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
தம்பதியர் தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்றிருந்த நிலையில், 23ஆம் திகதி இருவரும் மாயமானார்கள்.
10 நாட்களுக்குப் பிறகு, அதாவது, ஜூன் மாதம் 2ஆம் திகதி, ராஜாவின் உடல் 200 அடி பள்ளம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.
பொலிசார் சோனமை தீவிரமாகத் தேடிவர, மேகாலயாவுக்குச் சென்றிருந்த சோனம், மீண்டும் உத்தரப்பிரதேசத்திலுள்ள Ghazipur என்னுமிடத்தில் பொலிசில் சரணடைந்தார்.
சோகமே உருவாக, தங்களை யாரோ மர்ம நபர்கள் தாக்கியதாகவும், தன் நகையை அவர்கள் பறிக்க முயன்றபோது தன் கணவர் தடுக்க முயல, அவர்கள் அவரைக் கொன்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
அத்துடன் தான் சுயநினவிழந்துவிட்டதாகவும், தான் எப்படி Ghazipur வந்தேன் என்பது தனக்குத் தெரியாது என்றும், யாரோ தன்னைக் கடத்திக் கொண்டுவந்துவிட்டதாகவும் அப்பாவி முகத்துடன் சோனம் கூற, அவர் மீது பரிதாபம்தான் ஏற்பட்டது.
ஆனால், பின்னர் விசாரணையில், சோனமுக்கு ஏற்கனவே ராஜ் குஷ்வாஹா என்னும் காதலர் இருப்பதும், சோனமும் குஷ்வாஹாவும் சேர்ந்து திட்டமிட்டே ராஜாவைக் கொன்றதும் தெரியவந்தது.
இந்நிலையில், தம்பதியரின் திருமண வீடியோக்கள் முதல், சோனம் தன் காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் வரை தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
வெளியாகியுள்ள வரவேற்பு நிகழ்ச்சி வீடியோவைப் பார்க்கும்போது, இந்தப் பெண்ணா தன் கணவரைக் கொலை செய்தார் என எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவு மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் அந்த தம்பதியர்.
அதேநேரத்தில், குஷ்வாஹா ஏற்கனவே சோனமுடன் நெருக்கமானவர் என்பதற்கு ஆதாரமாக, அவர்கள் இருவரும் கேஷுவலாக தனித்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சோனம், குஷ்வாஹா மற்றும் அவரது மூன்று நண்பர்களும் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |