பிரபல கிரிமினல் கும்பலைச் சோ்ந்த இளைஞா் டெல்லியில் கைது! வெளிவந்த பின்னணி
இந்திய தலைநகர் டெல்லியில் சோனு தரியாபூா் கிரிமினல் கும்பலைச் சோ்ந்த 22 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருடன் நடந்த நோ் மோதலுக்குப் பிறகு அவா் கைது செய்யப்பட்டதாகவும், இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரை கைது செய்ததற்கு பிறகு பொலிசார் தெரிவிக்கையில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த Pooth Khurd பகுதியைச் சேர்ந்த குல்தீப் என்ற அஸ்லாம் எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் இரண்டு கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.