ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா ஆதரிக்காது! நெதன்யாகுவிடம் கூறிய ஜோ பைடன்? வெளியான தகவல்
ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூதரக தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பாரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அன்றைய இரவு நெதன்யாகுவிடம் தொலைபேசியில் அழைப்பில் ஜோ பைடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் அந்த உரையாடலில், ''இனி எந்த நடவடிக்கையிலும் அமெரிக்க படைகள் பங்கேற்காது'' என்று தெளிவுபடுத்தியதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நெதன்யாகு அமெரிக்காவை மோதலுக்கு இழுக்க முயற்சிக்கிறார் என்று பைடன் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்ததாக 3 மூத்த நிர்வாக அதிகாரிகள் NBC News ஊடகத்திடம் கூறியுள்ளனர்.
அத்துடன் இஸ்ரேலியர்கள் ஈரானுடன் நேரடிப் போரைத் தேடவில்லை என்று வெள்ளை மாளிகை நம்புவதாகவும், ஆனால் அமெரிக்க அதிகாரிகள் உறுதியாக இருக்க முடியது என்றும் ஒரு அதிகாரி The Outlet-யிடம் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |