அடுத்த ஏலத்திற்கு முன்பே ஐவரை கழற்றிவிடும் CSK! தமிழர்கள் இருவர் வெளியேற்றம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மினி ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை வெளியேற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொதப்பும் CSK
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக சொதப்பி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, 7 தோல்விகளை சந்தித்துள்ளது.
இதனால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ஃப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது. இந்த முறை ஏலத்தில் எடுக்கப்பட்ட சில வீரர்கள் அணியின் வெற்றிக்கு பங்களிக்கவில்லை.
இதன் காரணமாக ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக CSK அணி 5 வீரர்களை கழட்டிவிட உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் பெரிதாக விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. மோசமான ஃபார்மில் இருக்கும் அவர் விடுக்கப்பட்டு, மினி ஏலத்தில் குறைந்த விலைக்கு மீண்டும் எடுக்கப்படலாம்.
விஜய் சங்கர்:
மிடில் ஆர்டரில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் ஒன்றிரண்டு போட்டிகளில் சோபித்தாலும், பெரிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் ஐவரும் வெளியேற்றப்படலாம்.
சாம் கர்ரன்:
சுட்டிக்குழந்தை என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இங்கிலாந்தின் சாம் கர்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு CSK அணியில் இணைந்தார். ஆனால், ஆல்ரவுண்டரான கர்ரன் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சோபிக்காததால், இவரும் விடுவிக்கப்பட்டு மினி ஏலத்தில் எடுக்கப்படலாம்.
டெவோன் கான்வே:
நியூசிலாந்தின் டெவோன் கான்வே கடந்த சீசன்களில் சிறப்பாக விளையாடினாலும், நடப்பு தொடரில் ஃபார்மில் இல்லை. ரச்சின் ரவீந்திரா இவருக்கு போட்டியாக இருப்பதால், இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ராகுல் த்ரிப்பாதி:
அஜின்கியா ரஹானேவுக்கு பதிலாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ராகுல் த்ரிப்பாதி, தொடக்க வீரராக களமிறங்கினாலும் ஓட்டங்கள் எடுக்க தடுமாறுகிறார். இதனால் நிச்சயமாக இவரை சென்னை அணி வெளியேற்றலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |