இந்தியாவுக்கு எதிரான வெற்றி... மற்றவர்களும் இப்படி ஆட வேண்டும்! தென் ஆப்பிரிக்கா கேப்டன்
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் 96 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
இது குறித்து அவர் தற்போது கூறுகையில், இரண்டாவது இன்னிங்ஸின் போது, எனக்கு நானே ஒரு மூத்த வீரராக இறுதி வரை நிற்பேன் என்று உறுதி மொழி எடுத்தேன். நான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
எப்போதும் இது போன்று ஒர்க் அவுட் ஆகாது. ஆனால், இந்த முறை, குறிப்பாக இந்த இன்னிங்ஸில் ஒர்க் அவுட் ஆனது. இது இந்தியாவுக்கு எதிராக மன அழுத்தம் தரும் தீவிரமான தொடர் ஆகும். என்னுடைய ஆட்டத்தை சிலர் முட்டாள் தனமானது என்று சொல்லலாம், சிலர் என்னை தைரியமானவர் எனலாம். நான் தைரியம் என்பதாகத்தான் பார்க்க விரும்புகிறேன்.
இதை அணியின் மீது தாக்கம் செலுத்தும் ஒரு விஷயமாகவும் பார்க்கிறேன். பந்து வரும் திசையில் என் பணயமாக வைத்தேன். அப்படித்தான் அனைவரும் செய்ய வேண்டும். நாட்டுக்காக ஆடும்போது ஒவ்வொருவரும் இதைச்செய்ய வேண்டும்.
இதன் மூலம் நீங்கள் என்ன உணர்ந்தாலும் சரி இதை விடவும் பெரியது நாம் முடிக்க வேண்டிய பணி. ஆகவே அதை முடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
வெற்றி கேப்டனாக எனக்கு முதலில் மகிழ்ச்சியளிக்கிறது. நான் சொந்த சாதனைகளுக்காக ஆடுவதில்லை. நான் என் அணியினருக்காக, என் சகாக்களுக்காகவும் வெற்றிக்காகவுமே ஆடுகிறேன் என்று கூறியுள்ளார்.