நிலவில் அதிவேகத்தில் மோதிய SpaceX ரொக்கெட்- உருவான புதிய குழி
| SpaceX ரொக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் அதிவேகத்தில் மோதியுள்ளது. |
அமெரிக்க விண்வெளி நிறுவனம் SpaceX ஏவிய Falcon 9 ரொக்கெட்டின் மேல் பகுதி, கட்டுப்பாட்டை இழந்து, இன்று அதிகாலை சந்திரனில் 8,700 கி.மீ வேகத்தில் மோதியது.
இதனால், சந்திரனில் புதிய குழி உருவானதாக NASA அறிவித்துள்ளது.

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த ரொக்கெட்
இந்த ரொக்கெட், கடந்த ஆண்டு ஜனவரியில் Hakuto-R விண்கலத்தை ஏவுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதிக எடையுள்ள காரணமாக, ரொக்கெட் விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து, சந்திரனை நோக்கி தவறுதலாகச் சென்றது.
உருவான புதிய குழி
Einstein Crater அருகே நடந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. 14 மீட்டர் நீளமும், 4,000 கிலோ எடையும் கொண்ட இந்த ரொக்கெட் பகுதி, சந்திரனில் 18 மீட்டர் அகலம் மற்றும் 4 மீட்டர் ஆழம் கொண்ட குழியை உருவாக்கியிருக்கலாம் என NASA தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள், இந்த மோதல் நிகழ்ந்த இடத்தை தொலைநோக்கிகள் மூலம் கவனித்தனர். மேலும், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் சந்திரன் சுற்றுப்பாதை விண்கலங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளன.
அறிவியலாளர்களின் கருத்துக்கள்
லெஸ்டர்ப் பல்கலைக்கழகத்தின் ஹன்னா சார்ஜன்ட் கூறியதாவது: “இவ்வாறு விண்வெளி கழிவுகளை சந்திரனில் அனுப்புவது நல்லது அல்ல. இது அப்போலோ மிஷன் நினைவுச்சின்னங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடும்” என எச்சரித்துள்ளார்.
ஆனால், சில விஞ்ஞானிகள், இந்த மோதல் அறிவியல் தரவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படலாம் எனக் கூறுகின்றனர். மோதலின் வேகம், கோணம், தாக்கம் போன்ற விவரங்கள், சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உதவும்.
மகாவ் பல்கலைக்கழகத்தின் ரோபெர்டோ புஜியோலாக்கி கூறியதாவது: “சந்திரன் ஏற்கனவே கோடிக்கணக்கான விண்கல் தாக்குதல்களை சந்தித்துள்ளது. எனவே, இந்த மோதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால், திட்டமிட்ட ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்டால், இது பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |