இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்பேஸ்எக்ஸ் ரொக்கெட்
எலோன் மஸ்க்கின் SpaceX ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள SpaceX ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து, Starship Flight 9 இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.
மே 27 அன்று நிகழ்ந்த இந்த நிகழ்வு, எலோன் மஸ்க் நிர்வகிக்கும் நிறுவனத்தின் மிகப்பாரிய ராக்கெட் திட்டத்தில் மீண்டும் ஒரு பிரச்சனையாக பதிவாகி உள்ளது.
முதலில் 8 புதிய ஸ்டார்லிங்க் சிமுலேட்டர் செயற்கைக்கோள்களை விண்ணிலே வைக்க திட்டமிட்டிருந்த ஸ்டார்ஷிப் பைலட் 9, எரிபொருள் குழாயில் ஏற்பட்ட ‘கடுமையான சுரப்பு’ காரணமாக உயரநிலை கட்டுப்பாடை இழந்து, வானில் சுழன்றபடி, விண்மீன் போல எரிந்தபடி சென்றது. பேலோட் கதவும் திறக்கப்படவில்லை.
As if the flight test was not exciting enough, Starship experienced a rapid unscheduled disassembly. Teams will continue to review data and work toward our next flight test.
— SpaceX (@SpaceX) May 28, 2025
With a test like this, success comes from what we learn, and today’s test will help us improve Starship’s…
இறுதியில், எந்தவொரு சேதத்தையும் ஏற்படுத்தாமல் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
இதுவரை பல தடைகளை தாண்டியும் முன்னேறி வரும் SpaceX, இச்சம்பவத்தின்மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அடுத்த ஏவுதலை திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |