பிரான்ஸ் - ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ: 3,00,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவும் காட்டுத்தீ
தென்மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தீயணைப்பு வீரர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் பயங்கரமான காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தற்போது முதன்மையாக பிரான்ஸின் போர்டோ(Bordeaux) நகரின் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

காட்டுத்தீயின் தீவிரத்தன்மை காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளில் இருந்தும் 3,00,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பலர் விளையாட்டு அரங்கங்களிலும், கண்காட்சி மையங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
காட்டுத்தீ வேகமாக பரவி வரும் போர்டோ பகுதியில் இரவு நேரங்களில் காற்று குறைந்து சிறிய அளவில் மழை பெய்து இருப்பதால் காட்டுத்தீ பரவல் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிலைமை நீடிக்காது என்றும், செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 40°C (104°F) வரை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |