இன்று முதல் பாடசாலைகள் முழுமையாக திறப்பு - பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு
தரம் 1 முதல் 13 வரையான அனைத்து வகுப்புகளின் மாணவர்களும் இன்று முதல் வழமையான முறையில் பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் மாணவர்களின் தடைப்பட்ட கல்வி நடவடிக்கைகளை சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் மீண்டும் வழமையான முறையில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் பரவியமையினால் அனைத்து பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படுவதில் குறைவு ஒன்று ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாடசாலை கட்டமைப்புகளை சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
அதற்கமைய கடந்த நாட்களின் அனுபவத்துடன் சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் இன்று முதல் பாடசாலைகள் அனைத்து வழமையான முறையில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் போராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு மாணவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தால் அல்லது முதல் தரப்பு தொற்றாளர் என்றால் அவரை பாடசாலை அனுப்புவதனை தவிர்க்குமாறும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான காலை மற்றும் பிற்பகல் உணவுகளை வீடுகளில் இருந்து அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022