புதிதாக வரும் புலம்பெயர்ந்தோருக்கு வரி: சுவிட்சர்லாந்து திட்டம்
சுவிட்சர்லாந்துக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தோருக்கு வரி ஒன்றை விதிப்பது தொடர்பில் சுவிஸ் நாடாளுமன்றத்தில் விவாதம் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக வரும் புலம்பெயர்ந்தோருக்கு வரி
லிபரல் கட்சி முன்வைத்துள்ள அந்த திட்டத்தின்படி, சுவிட்சர்லாந்துக்கு புதிதாக வரும் வெளிநாட்டவர்களுக்கு, நாளொன்றிற்கு 10 முதல் 25 சுவிஸ் ஃப்ராங்குகள் வீதம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வரி ஒன்று விதிக்கப்படலாம்.

அல்லது, 11 ஆண்டுகளுக்கு, வருவாயில் கூடுதலாக மூன்று சதவிகிதம் வரி விதிக்கவேண்டும் என்பதுதான் திட்டம்.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றிற்கு ஒரு பில்லியன் பவுண்டுகள் வருவாய் கிடைக்கும்.
ஆளும் ஃபெடரல் கவுன்சிலும் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்றாலும், இதே வரியை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விதிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
ஏனென்றால், தடையில்லாப் போக்குவரத்து விதிகளின்படி, சுவிஸ் மக்களும் ஐரோப்பிய ஒன்றிய மக்களும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படவேண்டும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |