கீரையில் Facial: தொடர்ந்து 10 நாள் செய்தாலே போதும்!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை பாதுகாத்துக் கொள்வதில் ஓர் ஆர்வம் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அதற்காக பல விதமான பொருட்களை பயன்படுத்துவதும் வழக்கம்.
ஒரு சிலர் சந்தையில் விற்கப்படும் கிறீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் சருமத்தில் பிரச்சினை மட்டுமே அதிகரிக்கும்.
ஆகவே வீட்டில் இலகுவாக கிடைக்கும் கீரையை வைத்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- ஒரு கைப்பிடி அளவிற்கு பாளங் கீரை எடுத்துக்கொள்ளவும்.
-
இதை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
- பின் அரைத்து வைத்த கீரை பேஸ்ட்டில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
இதை எப்படி பயன்படுத்துவது?
-
முதலில் நன்றாக தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும்.
-
பின் தக்காளியில் சீனி சேர்த்து முகத்தை ஸ்க்ரப் செய்துக்கொள்ளவும்.
-
அடுத்து முகத்தை மீண்டும் கழுவி, அரைத்து தேன் சேர்த்த கீரை பேஸ்ட்டை முகத்தில் தடவிக்கொள்ளவும்.
இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை பார்க்கலாம். மேலும் இது தொடர்பில் விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |