முதன்மையான விமான நிறுவனம்... எரிபொருள் விலையால் சேவைகளை மொத்தமாக நிறுத்த முடிவு
திவாலான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தனது சேவைகளை நிறுத்தத் தயாராகி வருகிறது.
செயற்பாடுகளை நிறுத்தும்
ஸ்பிரிட் நிறுவனத்தை மீட்பதற்கான உடன்பாடு எட்டப்படாமல் அதன் நிர்வாகக் குழு கூட்டம் முடிவடைந்ததை அடுத்தே இந்த முடிவு என தெரிய வருகிறது.

Spirit விமான நிறுவனத்தின் வீழ்ச்சியானது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோக வழிவகுக்கும். மேலும், இரண்டு மாதங்களாக நீடித்து வரும் ஈரான் போரின்போது விமான எரிபொருள் விலை இரட்டிப்பானதன் காரணமாக, செயற்பாடுகளை நிறுத்தும் முதல் விமான நிறுவனம் இதுவாகும்.
ஸ்பிரிட் விமான நிறுவனத்தின் வீழ்ச்சி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தனது நெருங்கிய ஆலோசகர்கள் சிலர் மற்றும் காங்கிரஸில் உள்ள பல குடியரசுக் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, ஸ்பிரிட் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காக 500 மில்லியன் டொலரை அவர் முன்மொழிந்திருந்தார்.
20,000 வேலை இழப்புகள்
ஒரு காலகட்டத்தில், ஸ்பிரிட் நிறுவனம் அமெரிக்க விமான சேவைகளில் 5 சதவீதத்தைக் கொண்டிருந்தது. ஆனால் முதன்மையான விமான நிறுவனங்களுடன் போட்டியிட்ட சந்தைகளில் கட்டணங்களைக் குறைவாக வைத்திருக்க உதவியது.

இந்த நிலையில் தற்போது ஸ்பிரிட் நிறுவனம் ஒரு ஒழுங்குமுறையான முறையில் தனது செயல்பாடுகளை முடித்துக்கொள்ள இருக்குறது. இதன்படி, இரவோடு இரவாக விமானச் சேவைகள் நிறுத்தப்படும், விமானங்கள் திரும்ப அனுப்புவதற்காக உரிய இடங்களுக்கு மாற்றப்படும்,
மேலும் பணியாளர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர். ஸ்பிரிட் நிறுவனம் செயற்பாடுகளை நிறுத்துவதால், கிட்டத்தட்ட 20,000 வேலை இழப்புகள் ஏற்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |