ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
இந்தியாவில் ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கொரோனா காலம் என்பதால் மக்கள் அனைவரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஒருவர் தும்பினாலே காற்று வழியாக தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் வீடியோ மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள ஒரு சாலையோரம் உள்ள ஒரு சின்ன கடையில் ஊழியர் ஒருவர் சப்பாத்தி சமைக்கும் போது அதில் எச்சில் துப்பியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோ வை கண்டா சிலர் அடுத்தவர் உணவில் எச்சில் துப்புவது தவறு. அதுவும் கொரோனா காலத்தில் இப்படி செய்வது நியாயமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
गाजियाबाद के एक चिकन पॉइंट का वीडियो सामने आया है, जिसमें एक शख्स थूक लगाकर रोटी बनाता दिख रहा है. pic.twitter.com/utDi9Jh9F8
— Anubhav Veer Shakya (@AnubhavVeer) October 17, 2021
இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது இந்த செயலை செய்தவர் பெயர் தமீசுதீன் என்பதும் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.