பிரித்தானிய நாடாளுமன்றத்திலேயே சீனாவுக்காக உளவு பார்த்த நபர்: வெளிவரும் பின்னணி
சீனாவுக்கு என உளவு பார்த்த புகாரின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்ற ஆய்வாளர் மற்றும் இன்னொருவர் கைதாகியுள்ள நிலையில் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது..
தீவிரத்தனமை கொண்டவை
எதிரிக்கு பயனளிக்கும் தரவுகளை பகிர்ந்துள்ளதாக அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 29 வயதான Christopher Cash மற்றும் 32 வயதான Christopher Berry ஆகிய இருவர் மீதே வழக்கு பதியப்பட்டுள்ளது.
பிரித்தானியா தொடர்பான கட்டுரைகள், குறிப்புகள், ஆவணங்கள் அல்லது தகவல்களை அவர்கள் ஒரு வெளிநாட்டிற்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது தீங்கிழைக்கும் அவதூறு என சீனா தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மிகவும் தீவிரத்தனமை கொண்டவை என்றே அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர். குறித்த இருவரும் விசாரணை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
இதில் Christopher Cash என்பவர் சீனாவின் ஆய்வுக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, பல கன்சர்வேடிவ் எம்.பி.க்களை இவர் அணுகக் கூடியவர் என்றும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2023 மார்ச் மாதம் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியை சேர்ந்த 30 வயது கடந்த ஒருவர் மற்றும் எடின்பர்க் பகுதியை சேர்ந்த 20 வயது கடந்த ஒருவர் கைதானதாக பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் இருவரும் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தற்போது இந்த இருவரும் ஏப்ரல் 26ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |