தமிழன் நடராஜனிடம் இந்த மாற்றத்தை கவனீத்தீர்களா? பெங்களூரு அணியை திணற வைத்து அசத்தல் பந்து வீச்சு
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி வீரரான நடராஜன் அற்புதமாக பந்து வீசி அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அற்புதமாக பந்து வீசினார்.
குறிப்பாக ஆட்டத்தின் முதல் ஓவரில் ஒரே ஒரு யர்க்கர் மட்டுமே நடராஜன் வீசினார். அடுத்த 5 பந்துகளை மிகவும் மாறுபட்ட பந்துகளாக வீசினார்.
PCP6C
ஸ்லோ பால், ஷார்ட் பால், கட்டர் மற்றும் பவுன்சர் என பவுலிங்கில் வேரியேஷன் காட்டி அசத்தினார். அதே போன்று 12-வது ஓவரில் தன்னுடைய இரண்டாவது ஓவரை வீசிய நடராஜன், ஒரு யார்க்கர் கூட வீசவில்லை.
அவர் வீசிய அனைத்து பந்துகளும் மாறுபட்ட பந்துகளாக இருந்தது. மேலும் அந்த ஓவரில் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் வெறும் 6 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது.
அதே போலவே தன்னுடைய மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தான் என்று முன்னணி வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.
ஏனெனில் நடராஜனிடம் யார்க்கர் மட்டும் போட வேண்டாம். பவுலிங்கில் சில பல வேரியேஷன் நிச்சயமாக நீ காட்ட வேண்டும் அறிவுரை கூறியிருந்தார்.
அதை ஐபிஎல் தொடரில் நடராஜன் காட்டி வருவதை பார்க்கும் போது, சிறப்பாகவே இருக்கிறது.