கஷ்டமாக இருக்கிறது... 2021 ஐபில் தொடரிலிருந்து விலகுகிறேன்! கலக்கத்துடன் தமிழக வீரர் நடராஜன் வெளியிட்ட உருக்கமான வீடியோ
காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரிலிருந்து தமிழக வீரர் நடராஜன் விலகுவதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடராஜன் விலகியதை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த பதிவில் நடராஜன் பேசும் வீடியோ ஒன்றையையும் ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது.
அதில் பேசும் நடராஜன், இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக நான் விலகுகிறேன். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கடந்த வருடம் சிறப்பாக விளையாடியிருந்தேன், அதே போல் இந்த வருடமும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன்.
?️ "I'm sad to miss the remaining games this season."@Natarajan_91 has been ruled out of the tournament due to injury and we along with the entire squad wish him a speedy recovery ?#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/b4mzS3Rfrp
— SunRisers Hyderabad (@SunRisers) April 23, 2021
துரதிஷ்டவசமாக எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் குடும்பத்திற்கு, ஆதரவு ஊழியர்களுக்கு மற்றும் வீரர்களுக்கு மிகவும் நன்றி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் குடும்பத்தை இந்த வருடம் பிரிவதால் வருந்துகிறேன். என்ன செல்வதென்று தெரியவில்லை ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கிறது.
இனிமேல் விளையாடும் போட்டிகளில் ஐதராபாத் அணி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறன் என நடராஜன் தெரிவித்துள்ளார்.