இலங்கையில் பல பகுதிகளில் கடும் மழை; விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
இலங்கையில் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. அதன்படி பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு அசௌகரியம் நிலவி வருகின்றது.
நீர் மட்டம் உயர்வு
இதேவேளை, தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கிங் கங்கை மற்றும் நில்வல கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வல ஆறு நிரம்பி வழிவதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையின் தலைநகரான கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டு வீதியில் மக்கள் நடாமட இயலாம் இருகின்றது எனலாம். மேலும் கொழும்புவின் நிலையை இந்த வீடியோவில் பார்க்கலாம்.