லங்கா பிரீமியர் லீக் 2வது சீசன் குறித்து இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
லங்கா பிரீமியர் லீக் சசீன் 2 எப்போது தொடங்கும் என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக அறிவித்தபடி, லங்கா பிரீமியர் லீக்கின் (எல்பிஎல்) 2வது சீசன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2021 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்பதை இலங்கை கிரிக்கெட் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதன்படி, போட்டிகள் ஜூலை 30 முதல் 2021 ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என கூறப்படுகிறது.
இலங்கையின் தலைசிறந்த உள்நாட்டு டி-20 லீக் எல்.பி.எல்-யின் அறிமுக சீசன், கடந்த ஆண்டு ஹம்பாந்தோட்டாவின் எம்.ஆர்.ஐ.சி.எஸ்ஸில் 5 அணிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
அறிமுக சீசன் பெரிய அளவிலான கவனத்தைப் பெற்றது, மேலும் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான ரசிகர்கள் போட்டியை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பார்வையிட்டனர், 135 மில்லியன் பார்வையாளர்கள் இறுதிப் போட்டிகளைப் பார்த்தனர்.
2020 பதிப்பு வெற்றிகரமான பயோ-பப்பில் சூழலில் நடைபெற்றது.
இந்நிலையில், எல்.பி.எல்-யின் 2வது சீசனின் சுகாதார நெறிமுறைகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் திட்டமிடப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.