இந்திய கிரிக்கெட் வந்ததன் மூலம்... இலங்கைக்கு எத்தனை கோடி வருவாய் கிடைத்துள்ளது தெரியுமா? உறுதியான தகவல்
இலங்கைக்கு எதிரான இரண்டு தொடர்களில் இந்தியா விளையாட வந்ததன் மூலம் இலங்கை கிரிக்கெட் நூறு கோடி ரூபாய் வருமான ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்கு சென்று விட்ட நிலையில், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அணிக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அதன் படி இரு அணிகளுக்கிடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஒருநாள் தொடரை இந்தியாவும், டி20 தொடரை இலங்கையும் கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடர் மூலம் இலங்கை கிரிக்கெட்டிற்கு (SLC) 14.5 மில்லியன் அமெரிக்க டொலர் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புள்ளி விவரங்களை SLC செயலாளர் டி சில்வா கூறியுள்ளார். ஒருநாள் தொடர் முடிந்து, டி20 தொடர் நடைபெற்ற போது, இரண்டாவது டி20-க்கு முன் இந்திய அணி வீரர் க்ருணல் பாண்ட்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் இந்தியா-இலங்கை தொடர் ரத்து செய்யப்படும் நிலைக்கு சென்றது.
ஆனால், BCCI-யின் தலையீட்டின் மூலம் இந்த டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெற்றது. இந்த தொடர் இடையில் நிறுத்தப்பட்டிருந்தால், இது SLC-க்கு பெரும் இழப்பை சந்தித்திருக்கும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நாங்கள் வளர்த்த உறவின் காரணமாக இது சாத்தியமானது.
ஒளிபரப்பு மற்றும் மைதானம் போன்ற பிற உரிமைகளிலிருந்து எங்களுக்கு 14.5 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக டி சில்வா கூறியுள்ளார்.