இலங்கை கிரிக்கெட் வீரருக்கு NOC இல்லை: IPL-லில் RCB அணிக்கு பின்னடைவு
இலங்கை வீரருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் NOC வழங்காததால் IPL-லில் ஆர்.சி.பி அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆர்சிபி அணிக்கு பின்னடைவு
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து தொடங்குகிறது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் சூழ்நிலையில், RCB அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை வீரருக்கு NOC இல்லை
அதாவது, RCB அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுவரை தடையில்லா சான்றிதழ்(NOC) வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் IPL போட்டியில் RCB அணிக்காக நுவான் துஷாரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே RCB அணியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தொடக்க சில போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |