ஓங்கியிருக்கும் இலங்கை அணியின் கை! இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் இன்று மோதல்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கவுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கார்டிப்பில் நடைபெறவுள்ளது.
போட்டி நடைபெறும் மைதானத்தின் பிட்ச் துடுப்பாட்டத்துக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.
அங்கு இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2015ல் 182 ரன்கள் குவித்ததே அதிக ரன்களாகும்.
சராசரியாக இந்த பிட்ச்சில் 156 ரன்களை ஒரு அணி எடுத்துள்ளது.
குசல் பெரேரா தலைமையில் இலங்கை அணியும், இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணியும் களம் காணவுள்ளன.
இங்கிலாந்து மண்ணில் இதுவரை இலங்கை - இங்கிலாந்து அணிகள் 4 முறை மோதியுள்ள நிலையில் இலங்கை 3 முறையும், இங்கிலாந்து 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.