பெரிய இழப்பு.. டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் நட்சத்திர வீரர்கள்? சிக்கலில் இலங்கை கிரிக்கெட் வாரியம்
டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியில் இடம்பெற்ற இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியை செப்டம்பர் 12ம் திகதி இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வாமாக அறிவித்தது.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்கவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இருவரும் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 14ம் திகதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்க ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
குசல் பெரேராவுக்கு பின் தொடையிலும், லஹிரு மதுஷங்கவுக்கு தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
எனினும், தற்போது சிகிச்சை பெற்று வரும் குசல் பெரேரா உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மதுஷங்கவுக்கு பதிலாக மினோத் பானுகா டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
2-1 என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, டி20 தொடரில் 3-0 என ஒயிட் வாஷ் ஆனது.