இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி?

Sri Lanka India History of Sri Lanka
By Kirthiga Nov 28, 2024 09:40 AM GMT
Report

இலங்கையின் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு மேலான நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும்.

இதன் வரலாற்றை தீப வம்சம், மகா வம்சம், சூள வம்சம் போன்ற வரலாற்று நூல்களால் அறிந்துக்கொள்ள முடியும்.

இலங்கையில் முதல் முதலாக எழுதப்பட்ட நூல் தான் தீப வம்சம். இது கி.மு 4 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக எழுதப்பட்ட மகா வம்சமானது தீப வம்சத்தை வைத்து தான் புதுப்பித்து எழுதப்பட்டுள்ளது.  

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

தீப வம்சமானது கி.பி 4 ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்பவரால் எழுதப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

அந்தவகையில் தற்போது இந்த பதிவில் இலங்கையில் வரலாறு குறித்து விரிவாக தெரிந்துக்கொள்வோம். 

இலங்கையின் வரலாறு

பல வரலாற்று நூல்களின் அடிப்படையில் இலங்கையின் வரலாற்றை பற்றி ஆராய்கையில், இலங்கையின் வரலாறானது இந்தியாவின் கலிங்க நாட்டின் இளவரசரான விஜயனின் இலங்கை வருகையின் பின்னரே ஆரம்பமாகிறது. 

யார் இந்த விஜயன்?

விஜயன் என்பவர் இலங்கையின் முதலாவது சிங்கள மன்னன் என இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.  

இன்றைய கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் கலிங்க எனும் நாட்டில் தனது தந்தையினால் துரத்திவிடப்பட்டவன் தான் இளவரசன் விஜயன்.

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

விஜயனின் தந்தை சிங்கபாகு ஆட்சி செய்த லாலா நாட்டு மக்களை மிகவும் கொடுமை செய்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் அவனது தந்தையான சிங்கபாகுவிடம் முறையிட்டுள்ளனர்.

அதையடுத்து தான், விஜயனையும் அவனது 700 நண்பர்களையும் பாதி மொட்டையடித்து ஒரு கப்பலில் ஏற்றி கடலில் அனுப்பியுள்ளனர்.

அதன்போது தான் விஜயன் சுப்பராகா எனும் இடத்தில் கரையொதுங்குகிறான். அந்த இடத்திலும் நண்பர்களுடன் சேர்ந்து மக்களை தொந்தரவு செய்யும் விதமாக நடந்துக்கொண்டமையால், அங்கிருந்தும் கடத்தப்படுகிறான்.  

இறுதியாக இலங்கையின் தம்பபண்ணி எனும் இடத்தில் கரையொதுங்குகின்றனர். கப்பலில் சென்றுக்கொண்டிருக்கும் போது புயல் வீசியதன் காரணமாகவே கப்பல் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது.

அங்கு இயக்கர் இனத்தவரின் தலைவி குவேணியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

அதாவது விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கையில் இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்களின் ஆட்சிக்காலம் இருந்துள்ளது. இவர்களுள் இயக்கர் மகியங்கன, லக்கல போன்ற பிரதேசங்களிலும், நாகர் யாழ்ப்பாணத்தில் நாகதீவு, களனி போன்ற பிரதேசங்களிலும் வாழ்ந்துள்ளனர்.

ஆரியர்களின் வருகைக்கு முன்பு புராதான மக்கள் வாழ்ந்தாக கூறப்படும் சான்றாக, இராமாயணம் போன்ற புராதண கதைகள் உள்ளன.

விஜயனுக்கு பிறந்த குழந்தைகளில் ஒருவர் ஜீவஹத்தா மற்றவர் திசல ஆகும். விஜயனை பின்தொடர்ந்து சமூகத்தினவை சிங்களவர்கள் என கூற ஆரம்பித்தனர். விஜயனுக்கு அரச பட்டம் வழங்க வேண்டும் என அமைச்சர்கள் யோசனை செய்துள்ளனர்.

அதற்கு அவர்களுடைய வழக்கத்தில், அரச பதவி வழங்க வேண்டும் என்றால் அவர் இளவரசி ஒருவரை திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது வழக்கமாகும்.

பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே குவேனியை துரத்திவிட்டு மதுரை இராச்சியத்தில் இருந்து அரசகுமாரியை வரவைத்து திருமணம் செய்து முடிசூடிக் கொண்டான். இவரே இலங்கையை பல ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

தமிழர்களின் வரலாறு

தொடக்கத்தில் தமிழர் பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன.

பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின. இலங்கையின் வடபகுதி மக்களின் வரலாறு குறித்து எந்தவொரு தகவலும் வரலாற்று நூல்களின் கூறப்படவில்லை. 

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

16வது நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின.

அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளனர். 1815 ஆம் ஆண்டின் பிறகு முழுமையான நாடும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது.

இவர்களுக்கு எதிராக ஆயுதப் புரட்சிகள் 1818 இலும் 1848 இலும் நடத்தப்பட்டன. இறுதியாக 1948 இல் விடுதலை பெற்றது. அதையடுத்து போர்த்துக்கீச ஆட்சி வலுப்பெற ஆரம்பித்தது.

இலங்கையில் வணிகத்தில் ஈடுப்பட்ட போர்த்துக்கீசர்கள்

போர்த்துக்கீசக் தளபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் புறப்பட்ட கப்பல், புயலில் சிக்கி தவித்து இலங்கையின் கொழும்பு கரையை அடைந்தது.

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

அதன் பின்னரே இலங்கையில் முதல் வணிகத்தை போர்த்துகீசர்கள் செய்ய ஆரம்பித்தனர். பின்னர் அரசியல் உட்பூசல்களைப் பயன்படுத்தி தமது பலத்தை விரிவாக்கிக் கொண்டுள்ளனர்.

1580 ஆம் காலக்கட்டத்தில் போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தைப் பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான்.

அதையடுத்து 1597 இல் கோட்டே மன்னன் இறக்க, இலங்கையின் கரையோரப்பகுதி போர்த்திக்கீச வசமானது.

கண்டி இராசதானியுடன் 1638 இல் செய்யபட்ட ஒப்பந்தத்தை வைத்து ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர்.

1796 ஆம் காலப்பகுதியில் பிரித்தானிய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இடமளிக்காத ஒல்லாதர்களை எதிர்த்து, பிரித்தானியர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கைக் கரையோரப் பகுதிகளையும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள்.

ஒல்லாந்தர் 1801 இல் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையை தத்தம் செய்தனர்.

ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்களப் பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையைப்பயன்படுத்தி இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது கண்டி இராசதானியையும் 1815 இல் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.

இறுதியாக ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர், 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றது.

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

ஆங்கிலேயர் காலத்தில் அமைதியாக இருந்து வந்த சிங்கள - தமிழ் மக்கள் இடையில், அதன்பின்னர் அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளில் இன முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் ஆரம்பித்தது.  

சிங்கள - தமிழ் மக்களின் இன முரண்பாடு

ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும் அதற்கு முன்னரும் சிங்கள சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்வதாகக் கூறி சிங்கள அரசியல்வாதிள் இனப்பாகுபாடு, இன ஒழிப்பு போன்ற குற்றச்சாட்டுகளுடன் தமிழ் அரசியல்வாதிகளும் போட்டிப்போட ஆரம்பித்தனர். 

அதையடுத்து 1958 ஆம் ஆண்டில் இனக்கலவரங்கள் நிகழ ஆரம்பித்தது.

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டமும், 1972 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பும், பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பில் கொண்டுவரப்பட்ட முறையும் நிலைமையை மேலும் மோசமாக்கின.

பின் உள்நாட்டு போர் ஆரம்பமாகியது. அதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து, அகதிகளாகி சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்டனர்.

இந்த உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் வகையில், இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தமொன்றின்படி இந்தியா அமைதிகாக்கும் படையொன்றை இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியது.

இந்தியாவில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இளவரசன் - இலங்கையில் ஆட்சியமைத்தது எப்படி? | Sri Lanka History In Tamil

2001 ஆம் ஆண்டில் சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நார்வே முன் வந்ததையடுத்து அந்நாட்டின் அனுசரணையுடன், போர்நிறுத்த ஒப்பந்தமொன்று நடைமுறைக்கு வந்தது.

அதையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக இலங்கையின் போர்க்களம் சற்று ஓய ஆரம்பித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US