மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர்: நடத்தும் உரிமையை இழந்த இலங்கை
Sri lanka lose rights of women's champions trophy 2027: 2027-யில் நடைபெற உள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.
2027-யில் நடைபெற உள்ள ஆறு அணிகள் பங்கேற்கும், மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.
இலங்கை
2026 ஆடவர் டி20 உலகக்கிண்ணத்தை இணைந்து நடத்திய இலங்கை, 2027 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நடத்த இருந்தது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மாற்றுக்குழு எனப்படும் இடைக்கால நிர்வாகம் செயல்பட்டு வருவது சிக்கலாகியுள்ளது.
ஏனெனில், அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் நிர்வாக அமைப்புகளை ஐசிசி அங்கீகரிப்பதில்லை. இதன் காரணமாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது.
போட்டியை நடத்தும் அணி நேரடியாக தொடரில் விளையாட தகுதி பெறுவது வழக்கம். ஆனால், ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் மட்டும் இத்தொடரில் பங்கேற்க முடியும்.
பங்கேற்க முடியாத சூழல்
இலங்கை அணி 7வது இடத்தில் உள்ளதாலும், தொடரை நடத்தும் உரிமையை இழந்ததாலும் இலங்கை இதில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இலங்கைக்கு பதிலாக 6வது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். 2027 மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
என்றாலும், போட்டியை நடத்தவுள்ள புதிய நாடு எது என்பது, அக்டோபரில் நடைபெறவுள்ள அடுத்த ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் உறுதி செய்யப்படும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |