கல்வி அமைச்சின் அதிரடி முடிவு - அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
பாடசாலை மாணவர்களை இடைநிலை தரங்களுக்கு சேர்ப்பது குறித்து இலங்கை கல்வி அமைச்சு அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
கல்வி அமைச்சின் அதிரடி முடிவு
அதாவது அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் இடைநிலையில் இணைய விரும்பு மாணவர்கள் இனி விளையாட்டு திறன்களை வைத்து அனுமதிக்கப்பட மாட்டார்கள் என என இலங்கை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |