நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவார்கள்! இலங்கை தேசிய லீக் குறித்து முக்கிய தகவல்
இலங்கை தேசிய சூப்பர் லீக் (National Super League) கிரிக்கெட் தொடர் போட்டிகள் தொடங்கப்படவுள்ளது.
உயர்தர உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாக இது நடத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இந்த தேசிய சூப்பர் லீக் போட்டிகளானது கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய அணிகளை உள்ளடக்கியிருக்கும்.
நாட்டின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் பங்கெடுப்பார்கள். இதன்மூலம் அவர்களின் திறமை மற்றும் வெளிப்பாடுகளை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு அவதானிக்கும். இத்தொடரில் 50 ஓவர் போட்டி மற்றும் நான்கு நாள் போட்டிகள் நடைபெறும்.
50 ஓவர்கள் கொண்ட போட்டி ஜனவரி 24 ஆம் திகதி தொடங்கும். இதனை தொடர்ந்து நான்கு நாள் போட்டிகள் உடனடியாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தொடரில் ஒவ்வொரு தேசிய சூப்பர் லீக் அணியிலும் ஒரு தலைமைப் பயிற்சியாளர் மற்றும் உதவித் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் துணைப் பணியாளர்கள் குழுவொன்று செயற்படும்.
தேசிய சூப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு அந்தந்த பயிற்சியாளரால் தேசிய தேர்வாளருடன் சேர்ந்து செய்யப்படும் என தெரியவந்துள்ளது.